retro review in tamil நடிகர் சூர்யாவின் ரெட்ரோ திரை விமர்சனம்
retro review in tamil நடிகர் சூர்யாவின் ரெட்ரோ திரை விமர்சனம்
நடிகர்கள்:-
சூர்யா,
பூஜா ஹெக்டே,
ஜோஜு ஜார்ஜ்,
ஜெயராம்,
பிரகாஷ்ராஜ்,
நாசர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

கதை:-
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் ரெட்ரோ. இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து பூஜா ஹெக்டே முதல் முறையாக நடித்துள்ளனர்.

சிறுவயதிலேயே பெற்றோரை இழந்து ஆதரவற்ற நிலைக்கு ஆளாகும் பாரிவேல் கண்ணனை (சூர்யா) தத்தெடுத்து வளர்க்கின்றனர் திலகன் (ஜோஜு ஜார்ஜ்) – சந்தியா (ஸ்வாசிகா) தம்பதியினர். பாரி மீது வெறுப்புடனே இருக்கும் திலகன், எதிரிகளிடமிருந்து தன் வளர்ப்பு மகன் தன்னை காப்பாற்றிய தருணத்தில் அவரை தன் மகனாக ஏற்றுக் கொள்கிறார்.
தூத்துக்குடியில் ரௌடியாக இருக்கும் திலகன் (ஜோஜூ ஜார்ஜ்) தன் மகன் பாரிவேல் கண்ணனுடன் (சூர்யா) இணைந்து தன் சாம்ராஜ்யத்தை பலமாக வைத்திருக்கிறார்.
பாரிவேல் கண்ணன் (சூர்யா) என்கிற ரவுடியைக் காதலிக்கிறார் கால்நடை மருத்துவரான ருக்மிணி (பூஜா ஹெக்டே). (பூஜா ஹெக்டே) மீது கொண்ட காதலால் தனது கோபத்தையும், ரவுடித்தனத்தையும் விட்டுவிட்டு அவரைத் திருமணம் செய்ய முடிவெடுக்கிறார் பாரிவேல் கண்ணன் (சூர்யா).தன் காதலி ருக்மணியை (பூஜா ஹெக்டே) திருமணம் செய்வதற்காக அனைத்தையும் விட்டுவிட்டு புது வாழ்க்கைக்கு தயாராகிறார்.
இதனிடையே, தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து ஆப்பிரிக்காவுக்குக் கடத்தப்பட்ட ஒரு பொருள் (‘கோல்ட் ஃபிஷ்’) காணாமல் போனதாகத் தகவல் வருகிறது.
இதைத் தேடி, பாரியின் வளர்ப்புத் தந்தையான ஜோஜு ஜார்ஜ், திருமண விழாவுக்கு வருகிறார். அங்கு சூர்யாவிடம் ஆப்பிரிக்கா நாட்டிற்கு சொன்ன சரக்கை ஏன் கொண்டு செல்லவில்லை என ஜோஜு ஜார்ஜும் சூர்யாவும் சண்டையிட்டுக் கொள்ள அங்கு நடக்கும் மோதலில் பாரி மீண்டும் கத்தியைக் கையில் எடுக்கின்றார் இதில் காதலி கண்முன்னே வளர்ப்புத் தந்தையின் கையை வெட்டியதால் பாரியின் திருமணம் நிற்கிறது, காதலியும் கோபித்துக் கொண்டு வேறு மாநிலத்துக்கு சென்றுவிடுகிறார்.பாரி போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்.
சிறையில் இருக்கும்போதும் அவரிடம் ‘கோல்டு பிஷ் எங்கே’ என்று காவலர்கள் மூலமாகக் குடைச்சல் கொடுக்கிறார் டாடி. ஆனால் அவர் வாய் திறக்க மாட்டுகின்றார்.
சிறையில் இருக்கும் பாரியின் சண்டை போடும் திறனை கண்டு அவரை தங்களுடன் சேர்த்துக் கொள்ள விரும்புகிறது ஒரு கும்பல். இதற்காக அவரை சிறையிலிருந்து தப்பிக்கச் செய்கிறது. ஆனால், அந்த கும்பலை அடித்துவிட்டு தப்பிக்கிறார் பாரி.
ஒரு பக்கம் அந்த கும்பல் தேட, இன்னொரு பக்கம் வளர்ப்பு தந்தையின் ஆட்கள் தேட, தன் காதலியை தேடி புறப்படுகிறார் பாரி.
காதலியுடன் அவரால் சேர முடிந்ததா? பாரியை தேடிக் கொண்டிருக்கும் கும்பலின் பின்னணி என்ன என்பதே ‘ரெட்ரோ’ படத்தின் திரைக்கதை.